காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்..!

Published by
லீனா

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த  சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது.

தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை  வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலாரிகிர், திட்லாகர் மற்றும் சம்பல்பூர் தொழிற்சாலைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் குவியலை எண்ண 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஐந்து நாட்களாக 40 இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணியுள்ளனர்.

காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!  

எஸ்பிஐ உட்பட மூன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வங்கியாளர்களை பயன்படுத்தி எண்ணியுள்ளனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பணத்தை எண்ணியுள்ளனர். எண்ணும் போது சில இயந்திரங்கள் பழுதடைந்தன. டெக்னீஷியன்கள் பழுதுபார்ப்பதற்காக எங்களுடன் தங்கியிருந்தாக வங்கி ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக  தரப்பில்,பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில்,  நிலையில், தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், சாஹுவிடம் இருந்து காங்கிரஸ் விலகிக் கொண்டது என தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

10 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

18 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

27 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

35 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

42 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago