சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. நிலைமை மோசமாக உள்ளது.! காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளுக்கு நாள் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசன காத்திருப்பு நேரம் என்பது கூடிக்கொண்டே செல்கிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டாலும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியவில்லை. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அந்த ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

பம்பைவில், பக்தர்கள் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் 8-9 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. பம்பைவில் ஒரே நேரத்தில் 15,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் ஒரு ஓய்விடம் இருந்தது. இருப்பினும், இந்த வசதி 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, இரண்டு சிறிய ஓய்வு இடங்கள் மட்டுமே உள்ளன.

நிலக்கல் பகுதியிலும் குழுவினர் ஆய்வ செய்தனர். குளிரூட்டிகள்(AC) இயக்கப்படாமல் 100 முதல் 150 பக்தர்கள் வரையில் பேருந்துகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். குழு பின்னர் பம்பையில் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.  அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க குழு முடிவு செய்யபட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கூறினார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago