பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.! மனதை கேட்டு வாக்களித்ததாக பேட்டி.!

Default Image

ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். 

இன்று  குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.

இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.

ஆனால், ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறி எதிர்க்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ நான் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனால் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனது மனதை கேட்டு நான் வாக்களித்தது எனது தனிப்பட்ட முடிவு, அதனால்தான் அவருக்கு வாக்களித்தேன்.’ என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்