ஆற்றைக் கடக்கும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து தப்பிய காட்சி.!

Default Image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து சென்ற முயலும் வீடியோ வெளியாகியுள்ளது.

புதுடெல்லியின் தர்ச்சுலாவில் வெள்ளத்தில் பித்தோராகர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிஷ் தாமி அவரது கட்சி தொழிலாளர்கள் சிலர் அந்த வெள்ளத்தை இக்கரையில் இருந்து அக்கரைக்கு கடக்கும்போது வெள்ளம் தடம் புரண்டு ஓடும்பொழுது எம்.எல்.ஏ நழுவி விழுந்ததால் ஆற்றில் அடித்து சென்ற முயலும் போது அவரது கட்சி தொழிலாளர்கள் அவரை காப்பாற்றினர்.

அருகிலுள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்று நடந்த இந்த விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

திடீரென பெய்த மழையால் பித்தோராகரில் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்சியாரி, டார்கோட், மட்கோட் கிராமத்தை பித்தோராகர் சாலையில் பலத்த மழை பெய்தது.

கடும் மழையால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் கிராம மக்களை மீட்பதற்காக தர்ச்சுலா பகுதியில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்