தற்போது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை இரு அவையிலும் நிறைவேற்றியது.
இதனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராகவும் , குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் வட மாநிலங்களான டெல்லி , உத்தர பிரதேசம் ,மேற்குவங்காளம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
இதைத்தொடர்ந்து தற்போதும் சில இடங்களில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய பாரதிய ஜனதா கட்சி ஒருபுறம் குடியுரிமை சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குடியுரிமை சட்டத் பிரச்சனையில் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் தான், அவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழக்கியுள்ளது என கூறினார்.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…