மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி…!

Default Image

இன்று டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னரே சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இன்று டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்