106 நாட்கள் சிறைவாசம் ! அடுத்த நாளே நாடாளுமன்றத்திற்கு சென்ற சிதம்பரம்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னால மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றம் வந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை செய்த நிலையில் திகார் சிறையில் அடைத்தது.இதனால் சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை  விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்து.

சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர்  சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.சிதம்பரம் பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.நேற்று வெளியே வந்த நிலையில் இன்று ப.சிதம்பரம் நாடாளுமன்றம் வந்தார்.மேலும்  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் வெங்காய விலை உயர்வுக்கு எதிராக  நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்