#Breaking:காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

Published by
Edison
  • காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
  • அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ்(வயது 80),சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில்,திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு,இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: “உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான இணைப்பான டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி மறைந்த சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்.பொது சேவை மற்றும் காங்கிரஸ் கட்சிக்காக அவர் கடைசி வரை பணியாற்றினார்.அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள் ஒரு உத்வேகம்.அவரின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்தார். அவர் ஒரு திறமையான சட்டமன்ற உறுப்பினராகவும், சிறந்த நிர்வாக அனுபவம் உடையவராகவும் இருந்தார்.எனவே,அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி”,என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

34 minutes ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

1 hour ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

2 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

3 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

3 hours ago