உபியில் தனித்து போட்டியிட தயாராகிறது காங்கிரஸ்…!!

Published by
Dinasuvadu desk

உத்திர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க அக்கட்சி முயன்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் அக்கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடனும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் மாயாவதியும் அகிலேசும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க மறுத்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அகிலேஷ் யாதவ் , “காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், உ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் பாக் ஷி கூறியுள்ளார். அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

5 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago