Categories: இந்தியா

ஊழல், கலவரம் உள்ளிட்டவையில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியது காங்கிரஸ் .. கடைசி நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் நடைபெறும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு உள்ளது. இதனால் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று கடைசி நாளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், கலவரம், குற்றம், ஊழல், தகவல் கசிவு போன்றவற்றில் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் மாநிலத்தை “நம்பர் ஒன்” ஆக மாற்றுவோம்.

கலவரங்கள், குற்றம், ஊழல் மற்றும் காகித கசிவுகளில் (காங்கிரேசின் ஐந்தாண்டு ஆட்சியில்) ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்தியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். அதாவது, ஐந்தாண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், எங்களது அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனர்.

15 சீட்களை பாஜக தாண்டுமா என பார்ப்போம்.! சத்தீஸ்கர் மாநில முதல்வர் விமர்சனம்.!

எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரியவில்லை. ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள். டிசம்பர் 3ம் தேதி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

5 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago