இந்திய பிரதமர் ஆலோசனை மற்றம் உரை நிகழ்த்துவதற்கான நேரம் இது இல்லை என்று காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மக்கள் ஆங்காங்கே கொரோனாவால் மடிந்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை இன்மை போன்ற காரணங்கலாலும் மக்கள் அநியாயமாக பலியாகி வருகின்றனர். இந்த சூழலில் அடிக்கடி இந்திய பிரதமர் காணொலி வாயிலாக மக்களுக்காக நேரம் ஒதுக்கி உரையாற்றியும், ஆலோசனை வழங்கியும் வருகிறார்.
மேலும் பிரதமர் மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் மருத்துவ ஊழியர்களுடனான கலந்துரையாடலில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க உரையாற்றினார், இதனையடுத்து பிரதமரின் இந்த செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது, மேலும் காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி கே.சி வேணுகோபால் “மோடியை கொரோனா தொற்று காலங்களில் காணவில்லை” என்றும், அவர் உரைகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக செயல்பட வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார். மேலும் அவர், “அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?…எந்த பதிலும் இல்லை ” என்றும் கூறியுள்ளார். மேலும் அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…