பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!
காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவுக்காக உழைக்கும் தலைவர்களையும், தொண்டர்களையும் கட்சியிலிருந்து களையெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார்.
கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய அவர், 2027 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதால், பாஜகவுக்கு மறைமுகமாக வேலை செய்யும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “குஜராத் காங்கிரஸ் தலைமையிலும், தொழிலாளர்களிலும் இரண்டு வகையான மக்கள் உள்ளனர். ஒன்று, மக்களிடம் நேர்மையாக இருப்பவர்கள், அவர்களுக்காகப் போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறார்கள், இதயங்களில் காங்கிரசின் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். இரண்டாவது பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டுச் சேர்ந்தவர்கள் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரசின் பெயரால் செயல்பட்டு, பொதுமக்களை மதிக்காமலும், அவர்களுக்காகவும் பணியாற்றாமலும் இருப்பவர்களைப் பிரிப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
கட்சியை சுத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் 40 தலைவர்கள் வரை பதவி நீக்கம் செய்ய நாங்கள் தயார். மக்களின் நம்பிக்கையை முதலில் பெறவேண்டும். அதற்கு தேர்தலில் கவனம் செலுத்துவது மட்டும் போதாது. காங்கிரஸில் பாஜகவுக்காக ரகசியமாக வேலை செய்பவர்கள் வெளிப்படையாக கட்சியில் இருந்து வெளியே வந்து அவர்களுடன் சேர வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பாஜகவிடம் உங்களுக்கு இடம் இருக்காது.
குஜராத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றும், ஆனால் இப்போது மாற்றம் தேவை என்றும் அதற்கு இந்த இரண்டு குழுக்களையும் வரிசைப்படுத்துவதே கட்சியின் முதல் பணியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு குழுக்களும் பிரிக்கப்படும் வரை, குஜராத் மக்கள் கட்சியை நம்ப மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராகுல் காந்தி தனது உரையில், காங்கிரசில் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. காங்கிரஸ் தனது பொறுப்பை நிறைவேற்றாத வரை, குஜராத் மக்கள் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், “காத்மா காந்தி மற்றும் சர்தார் படேலைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய அவர், இந்த மாபெரும் தலைவர்கள் காங்கிரஸின் வலுவான அடித்தளத்தை அமைத்ததாகக் கூறினார். குஜராத்தின் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் பெண்களுக்காக தான் இங்கு வந்துள்ளதாகவும், அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்” என்றும் அவர் கூறினார்.
कांग्रेस पार्टी को मूल नेतृत्व गुजरात ने दिया, जिसने हमें सोचने, लड़ने और जीने का तरीका सिखाया। गांधीजी के बिना कांग्रेस पार्टी देश को आज़ादी नहीं दिलवा पाती, और गुजरात के बिना गांधी जी नहीं होते। उनके एक कदम पीछे, गुजरात ने हमें सरदार पटेल जी को दिया।
आज वही गुजरात रास्ता ढूंढ… pic.twitter.com/mWcvo2eOUH
— Rahul Gandhi (@RahulGandhi) March 8, 2025