Categories: இந்தியா

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Published by
கெளதம்

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இந்தியாவின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26இல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவுற்றதை அடுத்து வரும் ஏப்ரல் 26இல் மீதம் உள்ள 12 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார உரையின் போது, முஸ்லிம்களை “ஊடுருவிகள்” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி என குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்” என பரப்புரையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியாக மதத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி வருவதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

மோடி தனது உரையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் “இந்தியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மறுபங்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் கூறியதை மறுத்துள்ளது” என்றும், இவ்வாறு, வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தனது மனுவில் பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு “No Comments” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Recent Posts

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

1 hour ago

Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…

1 hour ago

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…

2 hours ago

பாஜக கூட்டணி., அதிமுகவில் முதல் விக்கெட் அவுட்! SDPI பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…

2 hours ago

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

3 hours ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

4 hours ago