சிக்கிம், நாகாலாந்து, திரிபுராவுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

1986-1996ம் ஆண்டுகளில் அஜோய் குமார் ஜாம்ஷெட்பூரில் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நகர எஸ்பியாக இருந்தார். அந்த நேரத்தில் அவர் ஊடகங்களால் என்கவுன்டர் நிபுணர் என்று அழைக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இடைக்காலத் தேர்தலில் ஜாம்ஷெட்பூர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் அதே வருடம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு (JPCC) காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார், 2020ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

இந்த நிலையில், தற்போது சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

7 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

8 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

9 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

9 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

12 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

13 hours ago