காங்கிரஸின் கூட்டணி பலத்துடன் ஜார்கண்டில் ஆட்சி அமைக்கிறது ஜே.எம்.எம்!

Published by
மணிகண்டன்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.
  • ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ( ஜே.எம்.எம் ) கட்சியுடன் இணைந்து கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன.

அதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 46 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதில் ஜே.எம்.எம் கட்சியானது 30 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது. அதே போல பாஜக அரசானது 25 இடங்களில் வென்றிருந்தது. பெரும்பாண்மை நிரூபிக்க 41 இடங்கள் இருந்தால் போதுமானது.

இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஜார்கண்டில் ஆட்சியமைக்க உள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றிய ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த தகவலை ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் இந்த வெற்றிக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை.., 

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை..,

சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

31 minutes ago

குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!

நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…

49 minutes ago

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…

2 hours ago

மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…

3 hours ago

ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…

4 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

16 hours ago