ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ( ஜே.எம்.எம் ) கட்சியுடன் இணைந்து கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன.
அதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 46 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதில் ஜே.எம்.எம் கட்சியானது 30 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது. அதே போல பாஜக அரசானது 25 இடங்களில் வென்றிருந்தது. பெரும்பாண்மை நிரூபிக்க 41 இடங்கள் இருந்தால் போதுமானது.
இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஜார்கண்டில் ஆட்சியமைக்க உள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றிய ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த தகவலை ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் இந்த வெற்றிக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…