இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராணுவ தினத்தை முன்னிட்டு நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் செய்யும் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு வார்த்தைகளால் நியாயம் சொல்ல முடியாது. இந்திய ராணுவ வீரர்கள் விரோதமான நிலப்பரப்புகளில் பணியாற்றுகின்றனர்.
இயற்கை பேரழிவு உள்ளிட்ட மனிதாபிமான நெருக்கடிகள் உள்ள போதும் தங்கள் தேச குடி மக்களுக்கு உதவுவதில் கவனமாக உள்ளனர். வெளிநாடுகளில் அமைதிகாக்கும் பணிகளிலும் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…