“நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்”- ராகுல் காந்தி!

Default Image

நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டரில், நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ராகுல் காந்தி, கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். மேலும், மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மீதான அக்கறை, மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்