பாதை தகராறில் ஆண், பெண்களுக்கிடையே மோதல் – 4 பேர் காயம்!

Default Image

பஞ்சாயத்து நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பாதை தகராறில் இருதரப்பினர் மோதி சண்டையிட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆராட்டுப்புழா பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட பாதையை ஒரு தரப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அதனை மற்றொரு தரப்பினர் அடைப்பதற்கும் முயற்சித்ததால் இந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆண் பெண் என்று பாராமல் இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken