ஆக.31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை முடிக்க யு.ஜி.சி. உத்தரவு

Published by
murugan

ஆகஸ்ட் 31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க யு.ஜி.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள், சேர்க்கை குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. யுஜி படிப்புகளில் சேருவதற்கான செயல்முறை 12 -ஆம் வகுப்பு முடிவு வெளியான பின்னரே தொடங்கும் என்று கூறியுள்ளது.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அனைத்து மாநிலகளில் 12 ஆம் வகுப்பு முடிவு ஜூலை 31-க்குள் தேதி அறிவிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) படிப்புகளில் சேருவதற்கான செயல்முறை செப்டம்பர் 30 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

யுஜி மற்றும் பிஜி படிப்புகளின் முதல் ஆண்டின் வகுப்புகள் அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கும். தற்போதுள்ள யுஜி 2 ஆம் ஆண்டு மற்றும் யுஜி 3 ஆம் ஆண்டு மற்றும் பிஜி 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, அவர்களின் வகுப்புகள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விரைவில் தொடங்கப்பட வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆகஸ்ட் 31 க்குள் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று யுஜிசி கூறியுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

கொரோனா நிலைமை மற்றும் மாநில / மத்திய அரசுகளின் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் 2021 அக்டோபர் 1 முதல் 2022 ஜூலை 31 வரை வகுப்புகள், தேர்வுகள், செமஸ்டர் விடுமுறையை போன்றவற்றை திட்டமிடலாம்.

தொற்றுநோய்களின் போது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் முழு கட்டணமும் திருப்பித் தரப்படுவதை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை ஆணையம் கேட்டுள்ளது.

 

Published by
murugan
Tags: ugc

Recent Posts

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

16 minutes ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

52 minutes ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

8 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

11 hours ago