அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவை தாக்கல் -அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம்..!

Published by
murugan

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது.
மேலும் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும்.  என்று மத்திய அரசுக்கும் , உத்தரபிரதேச மாநில அரசுக்கும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.அதன் பிறகு அதை மறுத்தும் சில செய்திகள் வெளியாகின தற்போது  உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  தெரிவித்துள்ளது.
வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று  நடைபெற்றது.அதில் உச்சநீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என பல உறுப்பினர்கள் கூறியதால் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

3 minutes ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

26 minutes ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

39 minutes ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

1 hour ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

2 hours ago

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

2 hours ago