மஹாராஷ்டிராவில், மோடியின் பெயரில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆட்டிற்கு போட்டி போட்ட வியாபாரிகள். 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது.
மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஆட்பாடி கால்நடை சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும். இங்கு கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த சந்தை கூடியது. இதில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபு ராவ் என்பவர் இந்த சந்தைக்கு தனது ஆட்டை விற்பதற்காக கொண்டு வந்தார்.
அந்த ஆட்டிற்கு மோடி எனப் பெயர் சூட்டியுள்ளார். பிங்க் வண்ணம் பூசப்பட்ட அந்த ஆட்டுக்கு, சந்தையின் அனைத்து வியாபாரிகளும் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். ஆட்டை ஏலம் விட்டதும் பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டு, அதிகபட்சமாக 70 லட்சம் வரையிலும் கேட்கப்பட்டது. ஆனால், ஆட்டின் உரிமையாளர் பாபு ராவ் 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது என கூறிவிட்டார். எழுபதுக்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால், உரிமையாளர் அதனை மீண்டும் அழைத்துச் சென்று விட்டார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…