உத்திர பிரதேசம் மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் யாதவ். இவர் தனது நண்பருடன் இணைந்து மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், சுபாஷ் அவரது நபரிடம் 50 முட்டையை உன்னால் சாப்பிட முடியுமா என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சுபாஷ் முடியும் என்று கூறியுள்ளார். மேலும், இருவரும் 50 முட்டைகளை தின்றால், 2000 ரூபாய் பெட் என்று முடிவு செய்தார்கள். இந்நிலையில், 40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து சாப்பிட்டு தனது நண்பரை மிரள வைத்தார். ஆனால் 41- வது முட்டையை சாப்பிட ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41-வது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவர் சுபாஷை காப்பாற்றுவதற்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் சென்ற மருத்துவமனையில், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…