50 முட்டைகளை சாப்பிடும் போட்டி! 41-வது முட்டையை சாப்பிடும் போது நேர்ந்த விபரீதம்!

Default Image

உத்திர பிரதேசம் மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் யாதவ். இவர் தனது நண்பருடன் இணைந்து மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், சுபாஷ் அவரது நபரிடம் 50 முட்டையை உன்னால் சாப்பிட முடியுமா என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சுபாஷ்  முடியும் என்று கூறியுள்ளார். மேலும், இருவரும் 50 முட்டைகளை தின்றால், 2000 ரூபாய் பெட் என்று முடிவு செய்தார்கள். இந்நிலையில், 40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து சாப்பிட்டு தனது நண்பரை மிரள வைத்தார். ஆனால் 41- வது முட்டையை சாப்பிட ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41-வது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவர் சுபாஷை காப்பாற்றுவதற்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் சென்ற மருத்துவமனையில், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்