கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது.
அதன்படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி விவசாயிகளுக்கு இழப்பீடாக 2 மாதங்களுக்கும் மேலான பறவைகளுக்கு தலா ரூ .200 மற்றும் 1 மாதத்திற்கும் குறைவான பறவைகளுக்கு தலா ரூ .100 வழங்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் இருந்து 46,000 பறவைகளையும், தேவைப்பட்டால் அண்டை பகுதிகளைச் சேர்ந்த மேலும் 12,000 பறவைகளையும் கொல்ல மாநில கால்நடை பராமரிப்புத் துறை முடிவு செய்துள்ளது. பறவைகள் கொல்லப்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் 10 நாள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வார்கள். அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மாதிரிகளையும் சோதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் புலம் பெயர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்த போது பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…