பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதுவதாகவும், மீண்டும் தொடர்பு கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21 அன்று ராஜஸ்தான் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் புகாரைப் பெற்றதை அடுத்து இதற்க்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த புகாரில் அக்டோபர் 20 ஆம் தேதி தௌசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறாக பேசியவதாகவும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத பக்தியையும் பிரியங்கா காந்தி இழிவுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் கட்சித் தலைவர்கள் அனில் பலுனி மற்றும் ஓம் பதக் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…