நான் எனது தொழிலில் தோற்றுவிட்டேன்! – காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் மாயம்!

Published by
மணிகண்டன்

ஆசியாவிலேயே மிகப்பெரிய காபி தோட்டம் வைத்துள்ள ஒரே நிறுவனம் என பெயர் கொண்டது காபி டே நிறுவனம். இந்த காபி டே உரிமையாளர் தான் காணாமல் போன வி.ஜி.சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணன் அவர்களின் மருமகனாவார்.

இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் வெகுநேரமாக அவர் வராததால், சந்தேகமடைந்த ட்ரைவர் வீட்டிற்கு தகவல் கொடுக்க, பின்னர் அப்பகுதியில் போலீசார் விரைந்தனர்.அந்த பகுதியில் நேத்ராவதி ஆறு இருப்பதாலும், உல்லால் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததை பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியதாலும், அந்த பகுதியில் சுமார் 200 மீட்பு படையினர் அங்கு விரைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரிக்கையில் அவர் எழுதியாக ஓர் கடிதமும்  போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், ‘ கடந்த 37 ஆண்டுகளில் 30 ஆயிரம் நேரடி தொழிலாளர்களை உருவாக்கியுள்ளேன். இருந்தும் எனது தொழிலில் நான் தோற்றுள்ளேன். இதுவரை நான் என்னுடைய முயற்சி அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.

என்மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது கம்பெனியின் பங்குளை வாங்கியிருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் அந்த பங்குகளை வாங்க சொல்லி என்னிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். எனது நண்பரிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளேன் அதனையும் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன்.

எனது கடன்களுக்கு நானே பொறுப்பு. என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என கூறினார். மேலும் , எனது பெயரில் உள்ள சொத்துக்களின் விவரங்களை இதில் இணைத்துள்ளேன் அதனை வைத்து கடன்களை செலுத்துமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் உண்மை தன்மையை தற்போது போலீஸ் தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

7 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

1 hour ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

1 hour ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago