கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வருகின்ற சட்டமன்றத் தோ்தலை என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக மற்றும் அதிமுக சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனால், பாஜக-அதிமுக மற்றும் பாமக இடையே நீண்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக 9 தொகுதிகளில் பாஜகவும், 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில்,
உப்பளம்- A. அன்பழகன், உருளையன்பேட்டை – ஓம் சக்தி சேகர், காரைக்கால் தெற்கு – K.A.Uஅசனா, முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன், முதலியார் பேட்டை – A. பாஸ்கர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான விரைவில் வெளியிடப்படும் என புதுச்சேரி பாமக அமைப்பாளர் கோ.தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…