கேரள கிராமத்தில் பிறந்த 21 வயது ஜெனிஜெரோம் தற்போது கேரள இளம் வயது பெண் விமானியாக உயர்ந்ததை எண்ணி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கரக்குளம் கிராமத்தில் பிறந்தவர் ஜெனிஜெரோம். இவரின் பெற்றோர் பியாஸ்ட்ரா, ஜெரோம் ஆவர். ஜெனிஜெரோம் பள்ளிப்பருவத்திலிருந்து தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தது மட்டுமல்லாது அதை நிஜமாகவும் மாற்றியுள்ளார்.
21 வயதான ஜெனிஜெரோம் நேற்று முன்தினம் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் அரேபியா ஜி 9-449 என்ற விமானத்தை திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளார். ஜெனிஜெரோமின் சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இவர் பிறந்த கரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இளம் வயது கேரள விமானிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், கேரளாவின் இளம் வயது விமானியாக சாதனை படைத்த ஜெனிஜெரோமிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் சாதனையை பகிர்வதில் கேரளாவும் மகிழ்ச்சியடைகிறது. இளம் வயது கனவை நனவாக்கிய ஜெனிஜெரோமின் வாழ்க்கை பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மேலும், ஜெனிஜெரோமின் ஆசையை நிறைவேற்ற துணை நின்ற அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். ஜெனிஜெரோம் அவரது வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…