உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி முதல்வர் பேசுகையில், தேர்வு அறையில் தேர்வு எழுதும்போது நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டு விடை எழுதலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இதையடுத்து அரசு பள்ளி தேர்வு மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான், அதனால் ரூ.100 விடைத்தாளில் வைத்தால் போதும் ஆசிரியர்கள் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்கள் குறைதீர் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து புகார் ஒன்று அளித்துள்ளார். இதைப்பார்த்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் ஆசிரியரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வை புகார் தெரிவித்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…