டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர்.
உடனே துப்பாக்கியை நீட்டிய அந்த திருடர்கள், கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்தனர். அதன் பின், அவர்கள் கொள்ளை அடித்தது தான்தான் என தெரியாமல் இருப்பதற்காக சிசிடிவி ரெக்கார்டரான டிவிஆர் என நினைத்து செட்டாப் பாக்ஸை கையுடன் ஏடுத்து சென்றனர் என காவல் துறை தெரிவித்தது.
இதனையடுத்து, புகாரின் பெயரில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் திருடர்களை பிடிக்கவுள்ளது. டிவிஆருக்கு பதில், செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்றதால் திருடர்களை எளிதாக அடையாளம் கண்டுள்ளோம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…