திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்கக் கோரியபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த மோதலில் பாஜக எம்எல்ஏ மனோஜ் திக்கா தாக்கப்பட்டார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜும்தாருக்கும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சுபேந்து அதிகாரி, மனோஜ் திக்கா, ஷங்கர் கோஷ், தீபக் பர்மன் மற்றும் நர்ஹரி மஹதோ உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள் மறு அறிவிப்பு வரும் வரை சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தங்கள் எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டதாகவும், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் பாஜக தலைவர் சுபேந்து அதிகாரி கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோவை பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதை காணலாம்.
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…