கிழக்கு அகர்தலாவில் பாஜக-கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திரிபுரா மாநிலம், கிழக்கு அகர்தலாவில் உள்ள கயர்பூர் பகுதியில் பாஜக-கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் மோதல் நடைபெற்றது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்குதலில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த மோதல், நள்ளிரவு வரை நடைபெற்றதாகவும், இந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு அகர்தலாவில் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், இதில் செய்திகளை சேகரிக்க சென்ற 3 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 10 வீடுகள், சில மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்தாக கூறப்பட்டுள்ளது. பின்னர், கூடுதல் படைகளை அமர்த்திய பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் போலீசார், தங்களின் விசாரணையைத் தொடங்கினர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…