அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது.
அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய அரசியல் சாசன தினம்(அல்லது) இந்திய அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,நவம்பர் 26 ஆம் தேதியான இன்று “நாட்டின் அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில்,71 வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விழாவில் உரை நிகழ்த்த உள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இன்று உரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிலையில்,அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் இந்த விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி,இந்த அழைப்பை ஏற்று திமுக,சிவசேனா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…