அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்!

Published by
Edison

அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது.

அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய அரசியல் சாசன தினம்(அல்லது) இந்திய அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,நவம்பர் 26 ஆம் தேதியான இன்று “நாட்டின் அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில்,71 வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விழாவில் உரை நிகழ்த்த உள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இன்று உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிலையில்,அரசியலமைப்பை மத்திய அரசு அவமதிப்பதாகக் கூறி அரசியலமைப்பு நாள் விழாவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் இந்த விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதன்படி,இந்த அழைப்பை ஏற்று திமுக,சிவசேனா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.

Recent Posts

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…

45 minutes ago

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

1 hour ago

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…

2 hours ago

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…

2 hours ago

அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!

வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…

3 hours ago

லைக்கா தலையில் இடியை போட்ட விடாமுயற்சி! ஒரு வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…

3 hours ago