யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வர்கள் 20 வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நாட்டில் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரச்சினைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் தேர்வு சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் 72 தேர்வு மையங்களில் சுமார் 6 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதயுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் உடல்நிலை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படலாம் எனவே தேர்வை 2-3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று, யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வு மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக செப்டம்பர் 30 தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 4 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போதும் தேர்வு ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சி -க்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…