பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று மாநிலங்கவையில் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ளார். மாநிலங்கவையில் இந்த மசோதா நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
மாநிலங்கவையில் மொத்தம் 245 இடங்களில் தற்போது 5 இடங்கள் காலியாக இருப்பதால் 240 எம்.பிக்கள் உள்ளனர். இந்த சூழ்நிலை காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளை சார்ந்த எம்பிக்கள் 112 பேர் உள்ளனர்.
பாஜக ,அதிமுக , பாமக மற்றும் ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சார்ந்த 128 எம்பிக்கள் உள்ளனர். எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்கவையில் எளிதாக நிறைவேற வாய்ப்பு உள்ளது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…