குடியுரிமை போராட்டம் எதிரொலி.! மோடியின் அசாம் பயணம் ரத்து..?

Default Image
  • நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது.
  • இப் போட்டியை தொடங்கி வைக்க  பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலமான டெல்லி ,அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது.சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக கூட மாறியது.

இந்நிலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க  பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மத்திய அமித் ஷா விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அவருடைய பயணமும்  ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்