மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.ஆனால் இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.எனவே இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.அப்பொழுது இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ உரையின் மீது பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள்.மத்திய அரசு வேண்டுமென்றே இலங்கை தமிழர்களை புறக்கணித்துள்ளது.மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது.இந்த சட்டம் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று வைகோ பேசினார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…