மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

Published by
murugan
  • மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.
  • இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா  தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் ஆதரவாகவும் , திமுக , காங்கிரஸை  சார்ந்த 83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். பின்னர் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாததை  ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கடந்த 30 ஆண்டுகளாக  தமிழகத்தில் இருக்கும்  ஈழத் தமிழர்களுக்கு  குடியுரிமை வழங்கப்படாதது  ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்.பிக்கள் பேசினர்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின்  அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுக்கதா ராய்  ஆகியோர் அரசியலமைப்பு  சட்டம் வழங்கிய பல்வேறு சட்டங்களை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்றும்  மத அடிப்படையில் குடியுரிமை  வழங்கும் முறையாக உள்ளது என எதிர்த்தனர்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தியது  காங்கிரஸ் எனக்கூறினர். ஊடுருவல்காரர்களுக்கும் ,அகதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மசோதா எந்தவித பாகுபாடும் இல்லை, எந்த மதத்தினரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இல்லை எனக் கூறினார்.

மேலும் மன்மோகன் சிங் , அத்வானி ஆகியோர் பாகிஸ்தான் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக 0.001 சதவிதம் கூட இந்த மசோதா இயற்றவில்லை என கூறினர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீண்ட நேரமாக அமித் ஷா  பதிலளித்தார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமாக இயற்றப்படவில்லை. நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என விளக்கம் அளித்தார்.

அமித் ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும் , எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Published by
murugan

Recent Posts

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

11 minutes ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

23 minutes ago

முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…

1 hour ago

பாகிஸ்தான் ஆதரவு கருத்து., 16 யூ-டியூப் சேனலுக்கு தடை! மத்திய அரசு உத்தரவு!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்  பரிதாபமாக…

1 hour ago

அகவிலைப்படி, போனஸ், திருமணத் தொகை.., அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகள் இதோ…

சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை  நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…

3 hours ago