குடியுரிமை திருத்த சட்டம்: ஏன் முஸ்லீம்கள் இல்லை ? பாஜக துணைத் தலைவர் கேள்வி

Published by
Venu
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • குடியுரிமை திருத்த சட்டத்தில்  ஏன் முஸ்லீம்களை மட்டும் இணைக்கவில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியிட்டுள்ளார்.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்தும்,போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது ஆளும் பாஜகவின் துணைத் தலைவர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் சந்திர குமார் போஸ்.இவர் சுதந்திர போராட்டத் தலைவர்களின் முக்கியமான ஒருவராக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவுமுறை கொள்ளுப்பேரன் ஆவார்.இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எந்த மதத்துக்கும் தொடர்பு இல்லை என்றால், ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளை ஏன் பிரித்து பார்க்கவேண்டும்.

குறிப்பாக அதில் ஏன் முஸ்லீம்களை மட்டும் இணைக்கப்படவில்லை.இது எல்லாம் வெளிப்படையாக இருக்கட்டும்.எல்லா மத, இன மக்களும் சரி சமமான  அளவில் நடத்தப்படும் மதசார்பற்ற நாடான இந்தியாவை மற்ற வேறு எந்த ஒரு நாடோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

5 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

6 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

6 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

7 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

7 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

8 hours ago