இந்தியாவில் குறையும் சீன மொபைலின் சந்தை மதிப்பு.. 72 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!

Published by
Surya

இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் பலரும் சீன பொருட்களை பயன்படுத்துவதை புறக்கணித்தனர். மேலும் சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதில், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்த நிலையில், இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 சீனா செயலிகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்த அந்த செயலிகள் அனைத்தும் நீக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களுக்கும் தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. அதனையடுத்து, சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தநிலையில், ஜனவரி – மார்ச் காலாண்டில் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அதுமட்டுமின்றி, கவுன்ட்டர் பாயிண்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, சீன நிறுவனங்களில் சந்தை மதிப்பு இந்தியாவில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், இந்தியாவில் 10 சதவீதம் வளர்ச்சியை கண்டது.
இதன்மூலம், சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், 1.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் சியோமி நிறுவனம், இந்தியாவில் 29 சதவீதம் சந்தைப் பங்கைக் கொண்டுள்ள நிலையில், தற்பொழுது அதன் சந்தை மதிப்பு, 1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

மேலும் விவோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17 சதவீதமாகவும், ரியல்மீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 சதவீதமாகவும், ஒப்போ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 சதவீதமாகவும் உள்ளது. இந்தநிலையில், சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.

Published by
Surya

Recent Posts

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

23 minutes ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

53 minutes ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

2 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

2 hours ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

14 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

14 hours ago