#Breaking: நெடுஞ்சாலை பணிகளுக்கு சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்தியாவில் நெடுஞ்சாலைகள் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக பல தரப்பின மக்கள், சீன பொருட்களை உபயோகிக்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் நடைபெறும் அனைத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு சீனா நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும், அது கூட்டுத் திடமாக இருந்தாலும் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025