லடாக் தாக்குதலில் சீன கமாண்டர் உயிரிழப்பு..? சீனா அறிவிப்பு .!

Default Image

கடந்த சில மாதங்களாக இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், இன்று இருநாட்டு ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஜூன் 15 -ம் தேதி லடாக்கில் நடந்த தாக்குதலில் சீன கமாண்டர் கொல்லப்பட்டதாக இந்த சந்திப்பில் சீன இராணுவம் அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்