அருணாச்சல பிரதேச எல்லையில் 5 பேரை கடத்திய சீன ராணுவம்.? – காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் ட்வீட்.!

Published by
பாலா கலியமூர்த்தி

அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் லடாக்கில் இந்திய – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக செய்தியின்படி, 5 பேரும் அண்டர் நாச்சோ வட்டத்தில் உள்ள செரா 7 என்ற ரோந்து பகுதியிலிருந்த்து கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ரசியா மற்றும் சீனா பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்திக்கும் நேரத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில் பக்கத்தில், அதிர்ச்சி செய்திகள், நமது மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் (பி.எல்.ஏ) கடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற சம்பவம் நடந்தது என்றும் சீனாவுக்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

40 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

46 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago