சீன நிறுவனம் 10,000 பேரை உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த மாநிலங்களவையில் உத்தரவு.
இந்தியாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உட்பட கிட்டத்தட்ட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்கள் என ஆகியோரை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை மாநிலங்களவை நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பிரதமர் மோடி, உட்பட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு விவாதம் நடத்த உத்தரவிட்டார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…