இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை அனுப்பிய சீனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சீனா இன்று அதிகாலை 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியதாக பெய்ஜிங்கிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து போராட மற்றும் விரைந்து செயல்பட சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் அனுப்பப்பட்டது தொடர்பாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சீனாவின் குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவி இந்தியாவுக்கு அதிகாலை விமானம் மூலம் அனுப்பப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்று தகவல் கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான கடந்த இரண்டு மாத கால போராட்டத்துக்கு பிறகு அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலக முழுவதும் உள்ள முக்கிய மருத்துவப் பொருட்கள், குறிப்பாக வென்டிலேட்டர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) ஏற்றுமதி செய்வதற்கான மிக பெரிய வணிக வாய்ப்புகளை சீனா கேட்டு வருகிறது. இந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கான உத்தரவுகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனிடையே இந்தியாவிற்கு ஏற்கனவே மருத்துவ கருவிகளின் இரண்டு முக்கிய பொருட்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

4 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago