இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா தடைவிதித்தது. இது சீனாவிற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனா இறங்கி வர தொடங்கியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் அஜித்தோவல் மற்றும் வெளியுறவுத்துறை சீனியர் அதிகாரி மூலம் தொலைபேசியில் பேசியதை அடுத்து நேற்று கல்வானின் ரோந்து புள்ளி 14-லிருந்து 15 – ஐ நோக்கி சீனா பின்னோக்கி நகரத் தொடங்கின. நேற்று மாலை நிலவரப்படி சீன இராணுவம் அதன் போர் வாகனங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தையும் ரோந்து புள்ளி 14- லிருந்து முழுமையாக அகற்றியது.
ரோந்து புள்ளி 14 -லிருந்து சீன ராணுவம் பின்வாங்கியிருந்தாலும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக நிறுத்தப்பட்ட புல்டோசர்கள், போர் வாகனங்கள் உள்ளிட்டவை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றையும், ரோந்துப் புள்ளி 17-யும் காலி செய்ய டெல்லியில் இருந்து உத்தரவுகள் போன் மூலம் பெய்ஜிங்குக்கு செல்வதால், சீனா அவகாசத்தை கேட்டதாக கூறப்படுகிறது.
அடுத்து ரோந்து புள்ளி 17-ல் கூடாரங்கள் மற்றும் புல்டோசர்கள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த 2-3 நாட்களில் சீனா கால்வானில் இருந்து பின்வாங்குவதாகவும் கடந்த ஏப்ரல் இருந்த நிலைக்குத் திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…