5 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஊரடங்கால் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 18 வயதிற்குள் இருப்பவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறையின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவர் மற்றும் பிற கொரோனா மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்படவில்லை. இந்த ரெம்டெசிவர் மருந்து 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அறிகுறி இல்லாமல் இருந்தாலோ அவர்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்த கூடாது என்றும், இதனால் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, 5 வயத்திற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியவேண்டிய தேவையில்லை. பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வழிகாட்டுதல் படி, 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணியலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேவையான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…