சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.
மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுருத்தி வருகிறது. கொரோனா இந்தியாவில் முதலில் கேரளாவில் உள்ள 3 பேரை தாக்கியது. பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையெடுத்து சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து பத்தனம் திட்டா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு அவர்களது உறவினர்கள் 2 பேரையும் கொரோனா தாக்கியது. பிறகு 3 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பியவர்களுடன் நெருங்கிய பழகியவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…