சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.
மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுருத்தி வருகிறது. கொரோனா இந்தியாவில் முதலில் கேரளாவில் உள்ள 3 பேரை தாக்கியது. பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையெடுத்து சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து பத்தனம் திட்டா திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு அவர்களது உறவினர்கள் 2 பேரையும் கொரோனா தாக்கியது. பிறகு 3 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும் இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பியவர்களுடன் நெருங்கிய பழகியவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…