#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

டெல்லியில்  பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் ,தமிழக முதல்வர் பழனிசாமி.

நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் , முதல்வர் பழனிசாமி .டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.   தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அரசியல் ரீதியில் கூட்டணி விவகாரங்கள் ,தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

2 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

2 hours ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

3 hours ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

4 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

4 hours ago