அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம்-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Published by
Venu

கேரளாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால்  கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.பல  மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

நிவாரண முகாம்களில் இரண்டரை லட்சம் பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய  40 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் .ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்  தெரிவிக்கப்பட்டது.

இன்று கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கவலபரா பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது.  நிலச்சரிவின் காரணமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது.மேலும் நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிக்  கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அவர்களில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 40 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.மேலும்  முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அனைத்து பிரச்னைகள் மற்றும் சிரமங்களையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

Published by
Venu

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

2 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

3 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

4 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

5 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

5 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

6 hours ago